கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 19, 2021

எல்.கே டொமைன் ரெஜிஸ்ட்ரி – ஹிதாவதி திட்டம் மற்றும் பேஸ்புக் நிறுவனம் ஆகியவை தங்கள் கூட்டுச்செயற்பாட்டு நிலையை அதிகாரபூர்வமாக அறிவித்தன. இந்த பிணைப்பின் மூலம், இலங்கையின் முக்கிய சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கின் நம்பகமான பங்காளராக ‘ஹிதாவதி’ மாறுகிறார்.

இந்த நிகழ்வு ஆனது கொழும்பு 05 இல் அமைந்துள்ள, இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) கேட்போர்கூடத்தில் பின்வருவோர் முன்னிலையில் நடைபெற்றது: கௌரவ. தலதா அத்துகோரலா – நீதி அமைச்சர், பேராசிரியர் கிஹான் டயஸ் – எல்.கே டொமைன் பதிவேட்டின் தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர் ரோஹன் சமராஜிவா – ICTA தலைவர், திருமதி ஷெல்லி தக்ரால் – இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பேஸ்புக்கின் கொள்கை திட்டங்களின் தலைவர், திரு. செனுரா அபேவர்தன , இலங்கைக்கான பேஸ்புக்கின் பொதுக் கொள்கை முகாமையாளர், திரு. யாசஸ் விசுத்தி அபேவிக்ரமா – இலங்கைக்கான பேஸ்புக்கின் கொள்கை திட்ட முகாமையாளர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல சிறப்பு விருந்தினர்கள்.

‘ஹிதாவதி’ ஒரு ஆதரவாளர், செவிமடுப்பவர், இணையத்தின் பயனர்களுக்கு ஒரு ஆலோசகர், குறிப்பாக சிறுமியர், இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் இணையவழித் துன்புறுத்தல், இணையவழி ஸ்டாக்கிங், இணையவழி பிளாக்மெயில் மற்றும் இணையவழிக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடனிருப்பது குறித்து சமூகத்திற்கு கல்வி கற்பிப்பவர்கள். மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி ஹிதாவதி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு வழிகாட்ட அது எப்போதும் இருக்கும்.

இந்த ஒத்துழைப்பு ஹிதாவதி வாடிக்கையாளர்களில் உள்ளடங்கியுள்ள பேஸ்புக் பயனர்களுக்கு மிகவும் முக்கியமானது ஏனெனில் இது அவர்களுக்கும் பேஸ்புக்கிற்கும் இடையேயான தகவல்தொடர்புக்கு உதவுகிறது, குறிப்பாக நேரடி அறிக்கையிடல் செயல்பாட்டில் இது பயனளிக்கிறது. மேலும், அனைவருக்கும் நன்மைகளைத் தருவதற்கு சமூக ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும் நேர்மறையாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை சமூகத்திற்கு இது விழிப்புணர்வை ஏற்படுத்தும்.