கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 19, 2026

இணையப் பாதுகாப்பு மற்றும் ஹிதவதி சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வொன்று 2026 பெப்ரவரி 11 அன்று கொலோன்னாவ டெரன்ஸ் என். டி சில்வா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஹிதவதி அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ-வளவாளர் ஒருவரால் இந்த அமர்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டு இணைய உலகில் பாதுகாப்பாக இருப்பது குறித்த முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.