கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மார்ச் 20, 2026

இணையப் பாதுகாப்பு மற்றும் ஹிதவதி சேவைகள் குறித்த விழிப்புணர்வு அமர்வொன்று 2026 பெப்ரவரி 12 அன்று வெல்லம்பிட்டிய ஸ்ரீ சித்தார்த்த மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஹிதவதி அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ- வளவாளர் ஒருவரால் இந்த அமர்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டு இணைய உலகில் பாதுகாப்பாக இருப்பது குறித்த முக்கிய விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர்.