கடைசியாக புதுப்பிக்கப்பட்டது மே 19, 2026

மர்மமான டெலிவரி பாய்

இலங்கையில் நம்மில் பெரும்பாலானவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்பும் ஒன்று தான் Cash-on-Delivery (COD). பார்சல் கிடைத்த பிறகு பணம் செலுத்தி, எளிதாக வாங்கிவிடலாம் என்பதால் இது வசதியாகத் தோன்றுகிறது.

ஆனால் இப்போது, இந்த அன்றாட பழக்கம் அமைதியாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. போலி டெலிவரி அழைப்புகள் மற்றும் QR code payments மூலம், மக்கள் எதற்கும் இல்லாமல் பணம் செலுத்தும் வகையில் மோசடிக்காரர்கள் ஏமாற்றுகின்றனர். இது எளிமையானது, வேகமானது, மேலும் பலர் நினைப்பதை விட அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மோசடி உண்மையில் எப்படி நடக்கிறது?

இந்த மோசடி எளிமையானது, ஆனால் சரியான நேரத்தில் திட்டமிட்டு செய்யப்படுகிறது:

  1. நீங்கள் Cash-on-Delivery order ஒன்றை இடுகிறீர்கள் அல்லது ஒரு பார்சல் வருமென எதிர்பார்க்கிறீர்கள்.
  2. டெலிவரி சேவையிலிருந்து அழைப்பது போல ஒருவர் உங்களுக்கு அழைக்கிறார்.
  3. உங்களிடம் பின்வருவன செய்யும்படி கேட்கப்படலாம்:
    • Text message ஆக அனுப்பப்பட்ட QR code ஒன்றை scan செய்யும்படி
    • டெலிவரியை “confirm” அல்லது “process” செய்ய சிறிய தொகை செலுத்தும்படி
  4. அந்த பணம் நேரடியாக மோசடிக்காரரிடம் செல்கிறது.
  5. பின்னர் உண்மையான டெலிவரி வந்தால் தான் மோசடி நடந்தது தெரியவரலாம்.

மக்கள் நினைப்பது vs உண்மையில் நடப்பது

“நான் ஏதோ order செய்திருக்கிறேன், அதனால் இது என் பார்சல் தான்.”
→ Data leaks அல்லது social media activities மூலம் மோசடிக்காரர்கள் phone numbers அல்லது delivery-related details பெறக்கூடும்.

“டெலிவரியை confirm செய்ய இது ஒரு சிறிய step தான்.”
→ உண்மையான COD deliveries-ல் பார்சல் கிடைக்கும் முன் advance payment தேவையில்லை. இப்படியான “confirmation” requests போலியானவை.

“QR code scan செய்வது harmless தான்.”
→ QR code scan செய்வது payment request அல்லது fraudulent website-க்கு வழிவகுக்கலாம். அது வெறும் தகவல் பார்க்க மட்டுமல்ல.

“நான் சிறிய தொகை தான் செலுத்துகிறேன்.”
→ சிறிய தொகையாக இருந்தாலும் அது நேரடியாக மோசடிக்காரரிடம் செல்கிறது. அதை மீண்டும் பெறுவது எளிதல்ல.

உங்களை எப்படி பாதுகாப்பது?

  • டெலிவரி callers எதிர்பாராத விதமாக அனுப்பும் QR codes-ஐ ஒருபோதும் scan செய்யாதீர்கள்.
  • COD items கிடைக்கும் முன் ஒருபோதும் பணம் செலுத்தாதீர்கள்.
  • எப்போதும் official courier services மூலமாக நேரடியாக verify செய்யுங்கள்.
  • அவசரப்படாமல், செயல்படுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்.
  • வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த மோசடி பற்றி தெரிவிக்கவும்.

நீங்கள் இலக்காகினால்

  • உடனடியாக நிறுத்துங்கள். Payment-ஐ தொடராதீர்கள்.
  • விரைவாக உங்கள் bank-ஐ தொடர்பு கொள்ளுங்கள்.
  • Call logs அல்லது screenshots-ஐ சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் incident-ஐ report செய்யுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்

Cash-on-Delivery என்றால், பார்சல் கிடைத்த பிறகே பணம் செலுத்த வேண்டும்.

உண்மையான எந்த delivery service-மும் advance digital payment கேட்காது.

Reference

https://www.timesofindia.indiatimes.com/city/kolkata/17-arrestedin-cash-on-delivery-scam/articleshow/130449825.cms